வனவாசம்

வண்ணத்து பூச்சி ஒன்று கண்டேன் ..
வனவாசம் ஒன்று சென்றேன் ..

வாடகைக்கு வாங்கி வந்து விசுவாசமாய் வளர்த்தேன் ..
வளர்ந்தது வளர்ந்ததை வாணிபமாக்க ஆசை பட்டேன் ..


பட்டு எடுத்து பருத்தியில் நெய்து
பத்து ரூபாய் க்கு  விற்றேன்..

பணம் வந்த பாடும் இல்லை ..
பட்டு பூச்சியும்  இல்லை ..

கணக்கு பார்க்க காசும் இல்லை ..
கூட்டி கழிக்க நோட்டும் இல்லை ..

மீண்டும் சென்றேன்
கேட்டது குரல்  ..வனம்மா என்றேன்

நீயும் விற்ற பாடு இல்லை ..
நானும் விட்ட பாடு இல்லை  ..

என்று இருக்கிறாயே ..

சிறுக சேமித்து வாழவும் இல்லை ..
பெருக்க எண்ணி பிழைக்கவும் இல்லை ..

என்னையும் உன்னையும் அளித்து எதை நீ வாங்கி ..
இன்பமாய் வாழ்வாய் என்றது.. .. 











   

Comments

Popular posts from this blog