ஏய் ஏகாதிபத்தியமே ...
சுழன்று அடிக்கும் மின்விசிறிகள் அல்ல நாங்கள்
சுத்தமாய் வீசும் இயற்கை காற்று நாங்கள்
எங்களை பாலிதீன் பையில் போட்டு அடைக்காதே..
போடுவதை எல்லாம் தின்னும் பிணம்தின்னி கழுகுகள் அல்ல நாங்கள்
நல்லதை மட்டும் எடுத்து கொள்ளும் அண்ணப்பறவைகள் நாங்கள்..
பருவம் தவறி பேயும் மழை அல்ல நாங்கள்
பருவம் தவறாமல் காய்க்கும் கனிகள் நாங்கள்
மழைக்கு முளைக்கும் காளான்கள் அல்ல நாங்கள்
மகிழ்வித்து மகிழும் மனிதர்கள் நாங்கள்
உனது காலனியை எங்கள் மேல் கழுட்டாதீர்
அச்ச்சாணி முறிந்து விடும் ..
--பிரவீன் குமார்

Comments

Popular posts from this blog