காதலும் காமமும் ஊடலும் கூடலும் தான் வாழ்க்கை என்றால் வாழ்ந்து பயனே இல்லை
Posts
Showing posts from 2016
- Get link
- X
- Other Apps
இயற்கை படைத்த அதிசயம் ஆறு மணி நேரம் பகல் ஆறு மணி நேரம் இரவு பிரிட்டிஷ் முதல் பாளையங்கோட்டை ஜமீன் வரை ஆண்ட நாடு நல்லவரும் நயவஞ்சகரும் மிகுந்த நாடு வாய்மையே வெல்லும் இங்கே வாழ் எடுத்தாலும் வெற்றி இங்கே ஊருக்கு ஓர் உத்தமர் இருந்தாலும் ஊனமாக கிடக்கிறது குணமாகிவிடுவேன் என்ற தன்னமிபிக்கை குறையாத நாடு இறைவனின் ஆசி பெற்ற நாடு --இந்தியா
- Get link
- X
- Other Apps
ஏய் ஏகாதிபத்தியமே ... சுழன்று அடிக்கும் மின்விசிறிகள் அல்ல நாங்கள் சுத்தமாய் வீசும் இயற்கை காற்று நாங்கள் எங்களை பாலிதீன் பையில் போட்டு அடைக்காதே.. போடுவதை எல்லாம் தின்னும் பிணம்தின்னி கழுகுகள் அல்ல நாங்கள் நல்லதை மட்டும் எடுத்து கொள்ளும் அண்ணப்பறவைகள் நாங்கள்.. பருவம் தவறி பேயும் மழை அல்ல நாங்கள் பருவம் தவறாமல் காய்க்கும் கனிகள் நாங்கள் மழைக்கு முளைக்கும் காளான்கள் அல்ல நாங்கள் மகிழ்வித்து மகிழும் மனிதர்கள் நாங்கள் உனது காலனியை எங்கள் மேல் கழுட்டாதீர் அச்ச்சாணி முறிந்து விடும் .. --பிரவீன் குமார்
- Get link
- X
- Other Apps
கிட்டி பிள்ளை விளையாடிய காலம் எங்கே தாவணி வாசம் எங்கே தாகம் தீர்க்கும் அடிகுழாய் எங்கே ஜவ்வாது வாசம் எங்கே பனைமர காடுகள் எங்கே பனைங்கா மண்டையன் எங்கே பட்டி எங்கே தொட்டியில் தண்ணீர் எங்கே ஓலை வீடுகள் எங்கே காலணா காசு எங்கே திருவிழா கடைகள் எங்கே கொலுசு சத்தம் எங்கே இயல்பான சிரிப்பு எங்கே நெல் மணி எங்கே மெல்லிய இசை எங்கே ... எங்கே எதை தொலைத்தோம் என்று தெரியவில்லை தேடினாலும் காப்பாற்ற யாரும் இல்லை --பிரவீன் குமார்